துப்பாக்கிச் சூட்டில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பலி

துப்பாக்கிச் சூட்டில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பலி
Gun shoot

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்நறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள நிட்டம்புவை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மேலும் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்