பேருந்து-கார் விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வைத்தியசாலையில்!

பேருந்து-கார் விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வைத்தியசாலையில்!
Today Accident

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுதாவளையில் நேற்று (11) இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ்ஸும் மட்டக்களப்பு பக்கமிருந்து கல்முனைப் பகுதியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.