யாழில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டர்சைக்கிள் விபத்து : ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்!

யாழில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டர்சைக்கிள்  விபத்து : ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்!
daily rasi palan

யாழ்ப்பாணம், சிறுப்பிட்டி பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று  மாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

நாயன்மார்கட்டு பகுதியை சேர்ந்த ஆரியரட்ணம் திருக்குமார் (32) என்ற இளைஞனே உயிரிழந்தார். 24 வயதான மற்றொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.