மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு..

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு..
Accident in Sri lanka

திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி ரொட்டவெவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து இன்றிரவு (18) 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் கலன்பிந்துனுவெவ-மெகொடவெவ,யகல்ல பகுதியைச் சேர்ந்த சஜித் லக்ஸான் ராஜபக்ச (19வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.