திரண்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்! யாழ் நகர் நோக்கி நகரும் போராட்டம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பெரும்பான்மை இன மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள் என்பவற்றை சுட்டிக்காட்டி குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் பெருமளவான மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அண்மைய நாட்களாக நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.