வேக கட்டுப்பாட்டினை இழந்த கார் விபத்து!

வேக கட்டுப்பாட்டினை இழந்த கார் விபத்து!
Accident in srilanka

இன்று 20.04.2022 காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு நெடுங்கேணி வீதியில் வேக கட்டுப்பாட்டினை இழந்த கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

முள்ளியவளையில் இருந்து நெடுங்கேணி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த சொகுசுகார் 7ஆம் கட்டைப்பகுதியில் வேக கட்டுப்பாட்டினை இழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

காரின் முன்பக்கம் கடுமையான சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன் காரில் பயணித்தவர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாத நிலையில் விபத்து தொடர்பில் முள்ளியவளை வீதிப்போக்குவரத்து பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்