சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோர் விளக்கமறியலில்!

சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோர் விளக்கமறியலில்!
colombo protest

கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகை மற்றும் காலிமுகத் திடலில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோர் நேற்று குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

கொழும்பு குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்படட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை தவிர டேன் பியசாத், மொறட்டுவை மாநகர மேயர் சமன் லால் பெர்னாண்டோ உட்பட மேலும் பலர் இன்று குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.