வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!

வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!
Accident

தனமல்வில – உடவலவ வீதியில் மூன்றாம் கட்டை பகுதியில் இன்று (07) பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 03 பேர் உயிரிழந்துள்ளனர்.

கெப் ஒன்றுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

விபத்தின் போது தாயும் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் பதுளையை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினர்.

விபத்துடன் தொடர்புடைய கெப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

தனமல்வில பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்