யாழில் ஒரு மாதத்திற்கு முன்னர் கொலை செய்து புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு

யாழில் ஒரு மாதத்திற்கு முன்னர் கொலை செய்து புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் – மணியம் தோட்டம் பகுதியில் கொலை செய்து புதைக்கப்பட்டிருந்த பெண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கொலை செய்யப்பட்டுள்ள பெண்ணின் மோட்டார் சைக்கிளும் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலுக்கு அமைய, சந்தேகத்திற்கிடமான பெண் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, இந்த கொலை சம்பவம் அம்பலமாகியுள்ளது.

கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட தகராறினால் 42 வயதான பெண் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் சந்தேகநபர்களின் வீட்டுத்தோட்டத்தில் குழிதோண்டி சடலத்தை புதைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான பெண்ணின் கணவரும், தம்பியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களையும் யாழ். நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.