பேருந்து பனை மரத்தில் மோதி விபத்து
வவுனியாவிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தே நேற்று மாலை இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேருந்து வீதிக்கு அருகிலிருந்த பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் பனைமரம் முறிந்து வீழ்ந்துள்ளது.
விபத்தில் பேருந்து சாரதி உட்பட மற்றுமொருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்