தினசரி இராசிபலன் - 28 - 2022 - ஆனி (June) - செவ்வாய்க்கிழமை
மேஷம்
மேஷ ராசி அன்பர்களே!
இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படு வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். வியாபாரத்தில் விற்பனை யும் லாபமும் கூடுதலாகக் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். இன்று அம்பிகையை வழி பட காரியத் தடைகள் விலகும்
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.
ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே!
வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும், எளிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும். உறவினர்களு டன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். குடும்பப் பொறுப்பு களை நிறைவேற்றும் வகையில் அலைச்சலும் அதன் காரணமாக சோர்வும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். இன்று நீங்கள் தட்சிணாமூர்த்தியை வழிபட சிரமங்கள் குறையும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே!
புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல்நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் உறவினர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் சுபச் செலவாக இருப்பது மகிழ்ச்சி தரும். தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்றாலும் பெரிதாக பாதிப்பு இருக்காது. விற்பனை வழக்கம்போல் நடைபெறும். விநாயகப் பெருமானை வழிபட மனதுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டாகும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவும் பொருள் சேர்க்கையும் ஏற்படும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
கடகம்
கடக ராசி அன்பர்களே!
அனுகூலமான நாளாக இருக்கும்.சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாகும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற் படும். வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்பப் பொறுப்புகளின் கார ணமாக அலைச்சலும் சோர்வும் ஏற்படும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். வியாபாரத் தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆனால், சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும். மகா விஷ்ணுவை வழிபட நல்ல திருப்பம் ஏற்படும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூல மாக முடியும்.
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே!
பரபரப்பான நாள். நண்பர்கள் மூலம் கிடைக்கும் செய்தி மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய முயற்சி சாதகமாக முடியும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும், கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆனால், அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வீண் சர்ச்சைகளில் ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். இன்று நீங்கள் சிவபெருமானை வழிபடுவது நன்று.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது அவசியம்.
கன்னி
கன்னி ராசி அன்பர்களே!
நாள் முழுவதும் மனதில் எண்ணங்கள் அலைமோதும். குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். பெரியவர்களின் உரிய வழிகாட்டுதலின் படிச் செயல்படுவது நல்லது. பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். அவர்கள் நீண்ட நாள்களாகக் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். இன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும்.
துலாம்
துலா ராசி அன்பர்களே!
சொல்லிலும் செய்லிலும் பொறுமை அவசியம். தேவையற்ற விவாதங்களில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்ட வண்னம் இருக்கும். என்றாலும் இறையருளால் பாதிப்பு இருக்காது. முக்கியமான விஷயங்களில் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசனை செய்ய வேண்டியது அவசியம். செலவுகளும் அதிகரித்த வண்ணம் இருப்பது கவலை தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். இன்று மகாவிஷ்ணுவை வழிபட மகிழ்ச்சி உண்டாகும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே!
புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்குவது நல்லது. பிற்பக லுக்குமேல் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். எதிரிகள் வகையில் சற்று கவனம் தேவை. தேவையான பணம் இருப்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. இன்று முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியா பாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். காலபைரவரை வழிபடுவது நலம் தரும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்படக் கூடும்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கொடுத்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசி அன்பர்களே!
நினைத்ததை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பள்ளி, கல்லூரிக்கால நண்பர்களைத் தொடர்பு கொண்டு பேசி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். இன்று ஆஞ்ச நேயரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் ஏற்படக்கூடும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் விவாதத்தைத் தவிர்ப்பது நல்லது.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.
மகரம்
மகர ராசி அன்பர்களே!
குடும்பத்தில் அன்பும் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றச் செலவு செய்ய நேரும். உணவு சம்பந்தமான அலர்ஜி அஜீரணம் ஏற்படக்கூடும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வெளி உணவைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்கள் வகையில் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படக்கூடும். என்றாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். இன்று மகாவிஷ்ணுவை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முற்பகலில் குழப்பமும் பிற்பகலில் தெளிவும் ஏற்படும்
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செயல்கள் முடிவதில் தாமதம் ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களே!
மகிழ்ச்சி தரும் நாள். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். என்றாலும் குடும்பம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் போது குடும்பபெரியவர்களின் ஆலோசனை அவசியம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும் என்றாலும் கவனம் தேவை. இன்று நீங்கள் பைரவரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் நன்மைகள் ஏற்படும்
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்ப உறவுகளால் பொருள் சேர்க்கை உண்டாகும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள்.
மீனம்
மீன ராசி அன்பர்களே!
உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். உற்சாகமாக இருப்பீர்கள். எடுத்த காரியங்கள் அனுகூலமாகும். எதிர்பார்த்த பணவரவு வாய்க்கும். சிலருக்கு திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சாதித்து விடுவீர்கள். உடல் நலத்தில் இருந்த பின்னடைவுகள் நீங்கும். என்றாலும் உறவினர்களிடம் பேசும்போது மட்டும் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கை தேவை. வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விட கூடுதலாகக் கிடைக் கும். இன்று மகாலட்சுமியை வழிபட பிரச்னைகள் நீங்கிவிடும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் திடீர் பணவரவுக்கும் வாய்ப்புண்டு.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர உறவுகள் பணம் கேட்டு வருவார்கள்